இரவில் கடைகள் புதிய வெளிச்சம்

img

இரவில் கடைகள்: புதிய வெளிச்சம் பிறக்குமா?

இரவிலும் தூங்கா நகரம் என்று பெயர் பெற்றிருந்தது மதுரை. மாலையில் கல்யாணம் நிச்சயித்து, இரவிலேயே அனைத்துப் பொருட்களும் வாங்கி, விடிகிற போது திருமணத்தை நடத்தி முடித்துவிடலாம் என்பார்கள். அந்த அளவுக்குப் பல்வேறு வகைப் பட்ட பொருட்களை விற்கிற கடைகளில் வகைக்கு ஒரு கடையாக இரவில் திறந்திருக்கும். கடைக் காரர்கள் சுழற்சி முறையில் இரவில் மாறி மாறிக் கடை திறந்து வைப்பார்களாம்.